search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் ஜவகர்பஜாரில் குவிந்த மக்கள்
    X

    கரூர் ஜவகர்பஜாரில் குவிந்த மக்கள்

    • கரூர் ஜவகர்பஜாரில் மக்கள் குவிந்தனர்.
    • தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக

    கரூர்

    தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கரூர் கடைவீதிகளில் பொதுமக்கள் ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க குவிந்தனர். தீபாவளியை முன்னிட்டு கரூர் ஜவகர் பஜார், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சுற்றி உள்ள இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள், தரைக்கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், காலணி கடைகள், வளையல் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகை புரிந்து வாங்கி செல்கின்றனர். இதனால் இந்த பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்"

    Next Story
    ×