search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
    X

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்
    • இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    தரகம்பட்டி அடுத்த தூளிப்பட்டியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் கோவிலுக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மகன் தர்மராஜூடன் சென்றார். அப்போது தரகம் பட்டி-மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் அக்கரைப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் சீரங்கன், தர்மராஜ் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சீரங்கன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த தர்மராஜ் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×