search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நீர்த்தேக்க தொட்டியில் மூழ்கி விவசாயி சாவு
    X

    நீர்த்தேக்க தொட்டியில் மூழ்கி விவசாயி சாவு

    • விவசாய தோட்டத்தில் உள்ள 20 அடி ஆழ தொட்டியில் நீச்சல் கற்று கொடுக்க சென்றவர் பலி
    • உடலை கைப்பற்றி அரவக்குறிச்சி போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43) விவசாயி. இவர், அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள 20 அடி ஆழ, நீர்த்தேக்க தொட்டியில், தம்பி குழந்தைகளுக்கு, நீச்சல் கற்றுக்கொடுக்க அழைத்து சென்றார். அப்போது, நீர்த்தேக்க தொட்டியில் முதலில் இறங்கிய வெங்கடேஷ், திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடன் சென்ற குழந்தைகள் கொடுத்த தகவலின்பேரில், அருகில் இருந்தவர்கள் வெங்கடேஷ் உடலை மீட்டனர். வெங்கடேஷ் மனைவி தீபிகா, கொடுத்த புகாரின்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×