search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி அணை நீர்மட்டம் உயராததால் கரூர் மாவட்ட விவசாயிகள் கவலை
    X

    அமராவதி அணை நீர்மட்டம் உயராததால் கரூர் மாவட்ட விவசாயிகள் கவலை

    • அமராவதி அணை நீர்மட்டம் உயராததால் கரூர் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
    • கடந்த ஒரு மாதத்தில் 4.54 அடி மட்டும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    கருர்:

    கேரள மாநிலம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாத நிலை உள்ளது. இதனால், கரூர் மாவட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஏப்ரல் மாத துவக்கத்தில் அணையின் நீர் மட்டம் 52.79 அடியை எட்டியிருந்தது. ஆனால் நேற்று அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 270 கன அடியாகவும், அணை நீர் மட்டம் 56.33 அடியாக மட்டுமே இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் 4.54 அடி மட்டும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    அமராவதி அணை மூலம் கரூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது. மேலும், அரவக்குறிச்சி, கூ.பரமத்தி, தான் தோன்றமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளை சேர்ந்த, கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஜூலை மாத இறுதியில் அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என கரூர் மாவட்ட விவசாயிகள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால் அணையின் நீர் மட்டம் உயராததால் கரூர் மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறக்கப்படுமா என்ற கவலையில் உள்ளனர்.


    Next Story
    ×