search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம்

    • மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • அன்றைய தினமே பணி நியமன ஆணை

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உள்பட பல்வேறு துறைகள் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை, ஜ.டி.ஜ., டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, 40-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணிநியமன உத்தரவு வழங்கப்படவுள்ளது. மேலும் இம்முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி்கான பதிவும் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×