search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாயனூரில் பாம்பு கடித்து ஊர்க்காவல் படை வீரர் சாவு
    X

    மாயனூரில் பாம்பு கடித்து ஊர்க்காவல் படை வீரர் சாவு

    • மாயனூரில் பாம்பு கடித்து ஊர்க்காவல் படை வீரர் பலியானார்
    • இதுகுறித்து, மாயனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    கரூர்:

    மாயனூர் அடுத்த, புதுசுக்காம்பட்டியை சேர்ந்தவர் சுப்புராமன் (வயது 31). இவர் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வந்தார். இவர் தோட்டத்தில் சூரியகாந்தி செடிக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது காலில் பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுப்புராமனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாய் தமிழரசி, கொடுத்த புகாரின்படி, மாயனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.




    Next Story
    ×