search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனிலவுக்கு கன்னியாகுமரி சென்ற கரூர் புதுப்பெண் சாவு
    X

    தேனிலவுக்கு கன்னியாகுமரி சென்ற கரூர் புதுப்பெண் சாவு

    • தேனிலவுக்கு கன்னியாகுமரி சென்ற கரூர் புதுப்பெண் உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது25). என்ஜினீயர். இவரது மனைவி கிருபா (25). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்களான நிலையில் தேனிலவுக்காக கன்னியாகுமரிக்கு ெ சன்றனர். அவர்கள் சிற்றாறில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் விடுதி உணவறையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது கிருபாவுக்கு விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிருபா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் கடையாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனிலவுக்க வந்த இடத்தில் புதுப்பெண் இறந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×