search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
    X

    அமராவதி ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

    • அமராவதி ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்
    • மீன்பிடித்து கொண்டிருந்த போது சம்பவம்

    கரூர்

    கரூர் வாஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நேரு (வயது 58). கூலி தொழிலாளி. இவர் அமராவதி ஆற்றங்கரையில் நின்று மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி ஆற்றில் விழுந்த நேரு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×