search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மாரியம்மன் கோவிலில் மண்டகப்படி விழா
    X

    கரூர் மாரியம்மன் கோவிலில் மண்டகப்படி விழா

    • கரூர் மாரியம்மன் கோவிலில் மண்டகப்படி விழா நடைபெற்றது
    • நாள்தோறும் பல்வேறு விஷேச வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.

    கரூர்,

    கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதைதொடர்ந்து பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நாள்தோறும் பல்வேறு விஷேச வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று கரூர் மாநகராட்சி சார்பில் மண்டகப்படி விழா நடைபெற்றது. அதில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், ஆணையாளர் ரவிச்சந்திரன், மண்டல குழு தலைவர்கள் அன்பரசன், கோல்ட் ஸ்பாட் ராஜா, வழக்கறிஞர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×