search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்
    X

    அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்

    • தரகம்பட்டியில் ரூ.12.40 கோடியில் கட்டப்பட உள்ளது
    • எம்.எல்.ஏ.சிவகாமிசுந்தரி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி சில ஆண்டுகளான கல்லூரி வகுப்புகள் கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பகுதிகளில் இயங்கி வருகிறது, இதனால் தனியாக கல்லூரி கட்டிடம் கட்டி இயங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கைவைத்தனர்.இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்திலபாலாஜி பரிந்துரையில் ரூ.12 கோடியே 40 லட்சத்தில் கல்லூரி அமைப்பதற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கீழப்பகுதி ஊராட்சி, மைலம்பட்டி அரசு மருத்துவமனை அருகில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.விழாவில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, ஆடிட்டர் சங்கர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், ராமலிங்கம், தரகம்பட்டி ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ், கீழப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் ஜாஜகான், மற்றும் அரசு அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×