search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மொபட் மீது கார் மோதி முதியவர் பலி
    X

    மொபட் மீது கார் மோதி முதியவர் பலி

    • மொபட் மீது கார் மோதி முதியவர் பலியானார்
    • இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 28). இவர் டி.வி.எஸ். மொபட்டில் வேலாயுதம்பாளையம் அருகே, நாணப்பரப்பு பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (42) என்பவர் ஒட்டி சென்ற மாருதி கார் மொபட் மீது மோதியது. அதில் கீழே விழுந்த சின்னப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, சின்னப்பனின் மகன் ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் கார் டிரைவர் செல்வராஜ் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×