search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.8 கோடியில்  2 புதிய மின்மாற்றிகள்  திறப்பு
    X

    ரூ.8 கோடியில் 2 புதிய மின்மாற்றிகள் திறப்பு

    • ரூ.8 கோடியில் 2 புதிய மின்மாற்றிகள் திறக்கப்பட்டது
    • அய்யர்மலை துணை மின் நிலையத்தில் நிறுவப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை துணை மின் நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ. 8 கோடி செலவில் சூரிய சக்தியில் இயங்கும் 26 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் இரண்டு மின்மாற்றிகள் பொருத்தும் பணி சமீபகாலமாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார், அதனை தொடர்ந்து அய்யர்மலை துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு மின்மாற்றிகளை துவக்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்,நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார், செயற்பொறியாளர் ஆனந்த், அய்யர்மலை உதவி செயற்பொறியாளர் சிராஜுதீன், குளித்தலை உதவி செயற்பொறியாளர் பாலகுமார், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ரமேஷ் மற்றும் நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், மின்வாரிய பணியாளர்கள் பொதுமக்கள் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×