search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழில் பெயர் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்-வணிக நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு
    X

    தமிழில் பெயர் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்-வணிக நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு

    • தமிழில் பெயர் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்-வணிக நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது
    • ஆலோசனை கூட்டம் உதவி ஆணையர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது

    கரூர்:

    கரூர், வெண்ணை மலையில் உள்ள தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக, வணிக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உதவி ஆணையர் ராமராஜ் தலைமை வகித்து பேசிய தாவது: கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறு வனங்கள், இதர நிறுவனங் களின் பெயர் பலகைகள் தமிழில், மற்ற மொழிகளை காட்டிலும் பெரிய எழுத்து களில் இருக்க வேண்டும்.

    ஆய்வின்போது தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் மீது சட்ட விதிகளின் கீழ் அபராதம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவர் இவ்வாறு பேசினார்.தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதி, கரூர் முதல் மற்றும் 2ம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் (பொறுப்பு) சரவணன், குமரக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×