search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கரூரில் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    கரூரில் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம்

    • கரூரில் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • குழந்தைகள் நலன் மற்றும் போக்சோ சட்டம், பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள், பெண்கள் தற்காத்து கொள்ளுதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், செல்லாண்டிப் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், குழந்தைகள் நலன் மற்றும் போக்சோ சட்டம், பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள், பெண்கள் தற்காத்து கொள்ளுதல் குறித்து, கரூர் ஜே.எம்., –2 நீதிபதி சுஜாதா விளக்கம் அளித்து பேசினார். இம்முகாமில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம், டாக்டர் சிவகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×