search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் ராமாயண போட்டி நிறைவு விழா
    X

    கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் ராமாயண போட்டி நிறைவு விழா

    • கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் ராமாயண போட்டி நிறைவு விழா நடைபெற்றது
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

    கரூர்:

    கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் ராமாய–ணப் போட்டி நிறைவு விழா நடைபெற்றது. தேசிய காவி–யமான ராமாயணத்தை இன்றைய இளைய தலை–முறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கட்டு–ரைப் போட்டி, கதை சொல் லுதல், நாடகம், மாறுவேடம் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசி–ரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இம்மாபெரும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூ–ரியில் நடைபெற்றது. இவ் விழாவை கல்லூரி செய–லர் யத்தீஸ்வரி நீல–கண்டப்ரியா அம்பா தொடங்கி வைத் தார்.

    சிறப்பு விருந்தினர்களாக சேரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் பழனி–யப்பன், ஆன்மீக சொற் பொ–ழிவாளர் பிரியா சந்தானகி–ருஷ்ணன் கலந்து– கொண்டனர். விழாவில் ராமனின் பண்பு நலன் களையும், தனித்தன்மை–களையும் மாண–வர்க–ளின் மனதில் பதியும் வண்ணம் பிரியா சந்தா–ன–கிருஷ்ணன் சொற்பொழிவு ஆற்றினார்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார். ராமாயண போட்டிகளில் அதிக மாண–வர்களை பங்கேற்கச் செய்த வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் வெற்றி விநாயகா, லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி, சேலம் ஹோலி மதர், ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா பன்னாட்டுப் பள்ளி, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி–களுக்கு விருதுகள் வழங்கப் பட்டது.


    Next Story
    ×