search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்கன்று நடும் விழா
    X

    மரக்கன்று நடும் விழா

    • கரூர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது
    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் நடப்பட்டன

    கரூர்,

    கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கரூர் மாவட்ட வனத்துறை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடத்தியது. இவ்விழாவினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில் அனைத்து நீதிபதிகள் மற்றும் மாவட்ட வன அலுவலர் சரவணன், தமிழ்வாணன், செயலர், பார் அசோசியேசன், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மொத்தம் 500 மரக்கன்றுகளில் 70 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. மீதமுள்ள மரக்கன்றுகள் இம்மாதத்திற்குள் நட்டு வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.

    Next Story
    ×