search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை தீவன பயிர் பற்றாக்குறை
    X

    கால்நடை தீவன பயிர் பற்றாக்குறை

    • கால்நடை தீவன பற்றாக்குறையினால் கரூர் விவசாயிகள் பரிதவிப்பு
    • பலமடங்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை

    கரூர்,

    பருவமழை சரிவர பெய்யாததால் க.பரமத்தி யூனியன் பகுதியில் கால்நடைக்கு தீவனம் கிடைக் காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். க.பரமத்தி யூனியன், கரூர் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதியாக உள்ளது. இங்கு, கிரஷர் மற்றும் ஜல்லி தொழிலுக்கு அடுத்தபடியாக, கால்நடைகளை நம்பியே பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான கால்ந டை கள் இப்பகுதி விவசா யிகளுக்கு வாழ்வாதாரமாக உள் ளது. பருவ மழையை நம்பியே, கால்நடை தீவன பயிர்களை விவசாயிகள் வளர்க்கின்றனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை, தொடர்ந்து பற்றாக்குறையாக உள்ளது. இதனால் தீவன பயிர்கள் வளர்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.

    மழை இல்லாமல் கால்நடைகளுக்கு கடலை கொடி, சோளத்தட்டு போன்ற பயிர்களை விலைக்கு வாங்கி, தீவனம் அளிக்க வேண்டியுள்ளது. இவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    Next Story
    ×