search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடவூர் அருகே கிராம மக்களுக்கு சிறுதொழில் பயிற்சி முகாம்
    X

    கடவூர் அருகே கிராம மக்களுக்கு சிறுதொழில் பயிற்சி முகாம்

    • கடவூர் அருகே கிராம மக்களுக்கு சிறுதொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது
    • புதிய தொழில் முனைவோரை உருவாக்கி, தற்சார்பு வாழ்வியல் கொண்ட மக்கள் வசிக்கும் பஞ்சாயத்தாக மாற்றும் முயற்சியில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    கரூர்,

    கடவூர் அருகே, வரவணை பஞ்சாயத்து மற்றும் பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் சார்பில் வேப்பங்குடி, கோட்டபுளிப்பட்டி, குளத்துார், பாப்பணம்பட்டி பகுதி மக்களுக்கு குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் பெறும் வகையில் சிறு தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.

    சிறு தொழில் பயிற்சியாளர்கள் ராமலட்சுமி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டு பினாயில், சோப் ஆயில், பேனா மை, சொட்டு நீலம், சோப்புத்துாள், பாத்திரம் விளக்கும் பவுடர் ஆகியவற்றை சிறு தொழிலாக செய்து வருமானம் பெறுவது குறித்து பயிற்சி அளித்தனர். புதிய தொழில் முனைவோரை உருவாக்கி, தற்சார்பு வாழ்வியல் கொண்ட மக்கள் வசிக்கும் பஞ்சாயத்தாக மாற்றும் முயற்சியில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. பசுமைக்குடி இயக்க தன்னார்வலர்கள் கருப்பையா, காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×