என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம்
- சிறப்பு, தனி தாசில்தார்கள் பங்கேற்பு
- மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது
கரூர்,
குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி தலைமை வகித்தார். சிறப்பு தாசில்தார் அருள், குளித்தலை, கிருஷ்ணரா யபுரம் தாசில்தார்கள் கலியமூர்த்தி, மோகன்ராஜ், தனி தாசில்தார்கள் வெங்கடேஷ், இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மறுவாழ்வு துறை அலுவலர் காமாட்சி, துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்து பேசினார். முகாமில் காது மிஷின், மூன்று சக்கர வாகனம், மொபைல்போன், பேட்டரி பைக், மூன்று சக்கர வீல், தையல் இயந்திரம், வங்கி கடன் உட்பட பல்வேறு உதவிகள் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.முகாமில் கண், காது, மூக்கு மருத்துவர், மன நல மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர். முன்பு பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிக ளுக்கு புதிய மருத்துவ அடையாள அட்டையை, ஆர்.டி.ஓ., புஷ்பதேவி வழங்கினார்.குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் தாலுகா பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்