search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தொழிலாளி திடீரென உயிரிழப்பு
    X

    தொழிலாளி திடீரென உயிரிழப்பு

    • தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.
    • மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

    கரூர்

    கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள தாராபுரத்தனூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று வீட்டின் அருகே மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×