search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மொபைல் போன் திருட்டு வாலிபர்கள் கைது
    X

    மொபைல் போன் திருட்டு வாலிபர்கள் கைது

    • ஆட்டோவில் இருந்த மொபைல் போனை திருடியவர்கள்
    • கரூர் டவுன் போலீசார் நடவடிக்கை

    கரூர்,

    கரூர் அருகே, ஆட்டோ டிரைவரிடம், மொபைல் போன் திருடியதாக, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கரூர், எல்.என்.எஸ்., சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 47) ஆட்டோ டிரைவர். இவர், திருகாம்புலியூரில் உள்ள ஸ்டாண்டில், ஆட்டோவை நிறுத்தி விட்டு அருகில் உள்ள, டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது, ஆட்டோவில் இருந்த மொபைல் போனை, இரண்டு வாலிபர்கள் திருடி கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப் பினர். முரளி கொடுத்த புகார்படி, மொபைல் போனை திருடியதாக தஞ்சாவூரை சேர்ந்த பாலமுருகன் (22), வினோத் (21) ஆகியோரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×