search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரவக்குறிச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
    X

    அரவக்குறிச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

    • அரவக்குறிச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை திருட்டு போனது
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி, டி.எம்,எச்., நகரை சேர்ந்த அப்துல்லா என்பவரது மனைவி அஜிதாஜ்மின் (வயது 30) கூலி தொழிலாளி. இவர் கடந்த 18ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு நாகப்பட்டினத்துக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஏழு பவுன் நகை, மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அஜிதாஜ்மின் அரவக்குறிச்சி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.




    Next Story
    ×