search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விஷம் குடித்த தொழிலாளி சாவு
    X

    விஷம் குடித்த தொழிலாளி சாவு

    • விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • மது பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது


    கரூர்

    கரூர் தாந்தோணிமலை பகுதிக்குட்பட்ட ராயனூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மணிவேல் (வயது 40) தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி (37) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மணிவேல் எந்த வேலைக்கும் செல்லாமல், மது பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிவேல் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×