search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகழூரில்  குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்
    X

    புகழூரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

    • புகழூர் நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணி தொடங்கியது
    • புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பணியினை தொடங்கி வைத்தார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டுக்கு உட்பட்ட மாத்யூ நகர் முதல் ராம் நகர் வரை (மாத்யூ நகர் விரிவாக்கம்) பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.புகழூர் நகராட்சி 16-வதுவார்டுக்கு உட்பட்ட செந்தூர் நகர், மீனாட்சி நகர், மோகனா நகர் பகுதி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான துவக்க விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் செல்வகுமரன், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

    Next Story
    ×