என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்5 May 2023 6:37 AM GMT
- வெள்ளக்கோவிலுக்கு சென்றுபோது விபரீதம்
- பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்
கரூர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கொடிங்கால்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது23). இவர் வெள்ளக்கோவிலில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணன் ராஜராஜனை பின்னால் அமர வைத்து வெள்ளக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சித்தலவாய் கடை வீதி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் ராஜராஜன் டிராக்டர் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர் ராஜராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணிக்கம்பட்டி டிராக்டர் டிரைவர் முருகேசனிடம் (48) விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X