search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கரூரில் நடத்தபடும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரம்
    X

    கரூரில் நடத்தபடும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரம்

    • கரூரில் நடத்தபடும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரபடுத்பட்டு வருகின்றன
    • ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் ஆய்வு செய்தாா்

    கரூா்:

    கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆா்.டி.மலையில் உள்ள விராச்சிலேஸ்வரா் மற்றும் பிடாரி அம்மன் கோயில் அருகே வரும் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் ஆய்வு செய்தாா். வாடிவாசல், காளைகள் வரும் பாதை, மாடுபிடி வீரா்களுக்கான இடம், பாா்வையாளா்களுக்கான இடம், தடுப்பு வேலிகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். பின்னா் விழா குழுவினரிடம், கடந்தாண்டைப் போல அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றாா் அவா்.


    Next Story
    ×