search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாயனூர் அருகே அரிவாளுடன் சுற்றிய தொழிலாளி கைது
    X

    மாயனூர் அருகே அரிவாளுடன் சுற்றிய தொழிலாளி கைது

    • மாயனூர் அருகே அரிவாளுடன் சுற்றிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்
    • இவரது ஆடு திருடுபோனதாக கூறப்படுகிறது.

    கரூர்:

    மாயனூரை அடுத்த, பிச்சம்பட்டி, குடி தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 45), கூலி தொழிலாளி. இவரது ஆடு திருடுபோனதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 19ம் தேதி மதியம் 1:00 மணியளவில் பிச்சம்பட்டி, சின்ன வாய்க்கால் பாலம், சுந்தரராஜ் என்பவரின் தென்னந்தோப்பு பகுதியில், வீரப்பன் அரிவாளுடன், பொதுமக்களை தகாத வார்த்தை களால் திட்டிக்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்தார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்துக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த மாயனூர் சப் இன்ஸ்பெக்டர் காளிமுத்து, வீரப்பனை கைது செய்து, அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.




    Next Story
    ×