search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மது அருந்திய தொழிலாளி சாவு
    X

    மது அருந்திய தொழிலாளி சாவு

    • மது அருந்திய தொழிலாளி உயிரிழந்தார்
    • அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார்

    கரூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர், அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவரது நண்பர்கள் அண்ணாமலை (26), தாமரை. இவர்கள் மூவரும், வெள்ளை அடிக்கும் வேலை செய்து வந்தனர்.சம்பவத்தன்று இரவு, வேலை முடித்துவிட்டு, ஊட்டியில் இருந்து 'பொலிரோ பிக்அப்' வாகனத்தில் ஊருக்கு வந்தனர். வாகனத்தின் பின்னால் அமர்ந்த ரமேஷ், மது அருந்திக் கொண்டே வந்துள்ளார். திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் கே. பேட்டையில் சாலையோர ஹோட்டலில் வாகனத்தை நிறுத்தி, சாப்பிட சென்றனர். அப்போது, ரமேஷை எழுப்பியபோது, அவர் மயங்கிக் கிடந்தார். இதையடுத்து, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து, அண்ணாமலை கொடுத்த புகாரின்படி, லாலாப் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகினறனர்.

    Next Story
    ×