என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மிஷினில் கை அறுப்பட்ட தொழிலாளி பலி
- சென்ட்ரிங் வேலை செய்த போது பரிதாபம்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
கரூர்,
குளித்தலை அருகே சென்ட்ரிங் வேலை செய்த போது மிஷினில் கை அறுப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி மருத்துவமனையில் பலியானார். திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா முத்தகபுடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிங்காரம் (வயது 61). இதுவரை திருமணமாகாத இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி அன்று சின்னபனையூரில் வீரம் மாள் என்பவரின் தொகுப்பு வீட்டில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது மிஷினில் அறுக்கும் போது எதிர்பாராத விதமாக இடது கட்டை விரல் மற்றும் இடது கால் சுண்டு விரலில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவி யுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிங்காரம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து குளித்தலை காவல் நிலையத்தில் அவரின் சகோதரர் மீனாட்சி சுந்தரம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்