search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வாகன விபத்தில் தொழிலாளி பலி
    X

    வாகன விபத்தில் தொழிலாளி பலி

    • அரசு பஸ் மோதி, பைக்கில் சென்ற தொழிலாளி பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கரூர்,

    பெரம்பலுார் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 36). தொழிலாளியான இவர், கரூர் மாயனுார் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த இவரை அப்பகுதியினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பொன்ராஜ் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×