search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மயங்கி விழுந்து வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு
    X

    மயங்கி விழுந்து வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு

    • ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • விசாரணைக்கு பின்னர் உடலை வடமாநிலத்திற்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை

    கரூர்,

    ஜார்கண்ட் மாநிலம் சோடா மாவட்டம் பதம்பூர் பகுதியை சேர்ந்தவர் அனந்த ஹரி ராய் மகன் பரமேஸ்வரராய் (வயது 55). இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது ஊரில் இருந்து கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளி வாட்டர் போர்டில் சமையல் வேலைக்கு சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி தண்ணீர் பள்ளி வாட்டர் போர்டு அருகே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பிறகு திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×