search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X

    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    • மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்
    • கரூர்-தாராபுரம் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், கூடலுார் கீழ்பாகம் காந்தி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது30). கூலி தொழிலாளியான இவர் சின்னதாராபுரத்தில் உள்ள லேத் பட்டறையில் வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த கார்த்திகேயன் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் உயிரிழந்த கார்த்திகேயன் குடும்பத்துக்கு லேத் பட்டறை நிர்வாகம் சார்பில் நிதியுதவி வழங்ககோரி சின்ன தாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன் கரூர்-தாராபுரம் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


    Next Story
    ×