search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மின்சாரம் பாய்ந்து வாலிபர் சாவு
    X

    மின்சாரம் பாய்ந்து வாலிபர் சாவு

    • மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்
    • பணி செய்து கொண்டிருந்த போது சம்பவம்

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்தார். கரூர், காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 26). திருமணமாகாத இவர், மணல்மேடு அடுத்துள்ள டெஸ்க் பார்க் பகுதியில் தனியார் டெக்ஸ் நிறுவன கட்டடத்தில் ஒப்பந்த அடிப்படையில் மொசைக் பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மொசைக் இயந்திரத்தில் ஏற் பட்ட மின் கசிவால் பழனிவேல் மீது மின் சாரம் பாய்ந்தது. இதில் துடிதுடித்து சுருண்டு விழுந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பழனிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறுத்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×