search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி சிறுமி மீது டிராக்டர் ஏறியதில் கால்கள் நசுங்கி படுகாயம்
    X

    பள்ளி சிறுமி மீது டிராக்டர் ஏறியதில் கால்கள் நசுங்கி படுகாயம்

    புகளூர் அருகே பள்ளி சிறுமி மீது டிராக்டர் ஏறியதில் கால்கள் நசுங்கி படுகாயம்

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் மசக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 44 ).இவரது மகள் அக் ஷயா ( 10) இவர் புகளூர் காகித ஆலை பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி அக் ஷயா புகலூர் நானபரப்பு ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் எழுது பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பிய போது டிராக்டர் ஓரமாக நின்று கொண்டிருந்த அக் ஷயா மீது டிராக்டர் ஏறியது. இதில் அக் ஷயாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் விபத்து ஏற்படுத்திய வேலாயுதம்பாளையம் அருகே வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த அல்லிமுத்து (45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×