என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
திடீர் மின்தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு
- தளவாபாளையம் பகுதியில் திடீர் மின்தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு
- நிறுவனங்களும் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவாபாளையம், தோட்டக்குறிச்சி புகளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக தளவாபாளையம் பீடரில் உள்ள வடிவேலம்பாளையம் அருகில் உயர் அழுத்த மின் பாதையில் மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்தது. அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள மின்சார இன்ஸ்டலேட் ஒன்று பழுதானது . இதனால் திடீரென தளவாபாளையம், புகளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக மின் வாரிய ஊழியர்கள் மின்சார வயரை சீரமைப்பதில் பணிகள் தாமதப்பட்டது . அதேபோல் மின்சார இன்வேட்டர் பழுதானையும் உடனடியாக சரி செய்ய தொடர்ந்து இரவு நேரமாகியும் பின் சப்ளை இல்லாததால் மளிகை கடைக்காரர்கள், ஓட்டல் கடைக்காரர்கள், டீக்கடைக்காரர்கள், பேக்கரி கடைக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும்,வியாபார நிறுவனங்களும் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர். அதேபோல் பொதுமக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர் . இந்நிலையில் இரவு 2 மணி அளவில் மின்வாரிய பணியாளர்கள் அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயர்களையும் இன் வேட்டர்களையும் சீரமைத்து மின் விநியோகம் செய்தனர். இந்நிலையில் மின்சார வாரிய பணியாளர்கள் இரவில் வேலை செய்து கொண்டு இருந்தபோது அந்தப் பகுதிக்கு 5 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு வேகமாக வந்துள்ளது. அதை பார்த்த ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு நகர்ந்து விட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்