என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரி அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து-கணவருக்கு வலைவீச்சு
- ஆத்திரமடைந்த கார்த்திசன் மனைவியை கத்தியால் தாக்கியுள்ளார்.
- தங்கம் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே உள்ள மூலக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திசன் (வயது40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தங்கம் (36). இவர்களுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.
தங்கம் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 17 பவுன் நகைகளை உறவினர் ஒருவரிடம் பாதுகாப்பு கருதி கொடுத்து வைத்துள்ளார்.
ஆனால் அந்த நகைகளை கேட்டு அவரது கணவரான கார்த்திசன் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் -மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்திசன் தனது மனைவியை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதில் தங்கத்தின் தலை மற்றும் இரண்டு கைகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனே கார்த்திகேசன் அங்கிருந்து சென்று விட்டார்.
படுகாயமடைந்த தங்கம் உடனடியாக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திசனை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்