search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
    X

    குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

    • ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    குன்னூர்,

    குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கி றது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். இதனை குன்னூரில் உள்ள பல்வேறு சமூகத்தினர் உபயமேற்று நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பக்தர்க ளின் பங்களிப்புடன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்ேபாது, இந்த பணிகள் முடி வடைந்ததை தொடர்ந்து, கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்ய ப்பட்டது.

    அதன்படி நேற்று மகா கணபதி பூஜை மற்றும் சிறப்பு ஹோ மங்களுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து கன்னி மாரியம்மன் கோவிலில் இருந்து முளை ப்பாலிகை, தீர்த்த குடம் ஆகியவை மேள-தாளம் முழங்க ஊர்வலமாக யாக சாலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் முதல் கால யாக பூஜை நடை பெற்றது.

    பின்னர் வி.பி.தெரு சந்தான வேணு கோபால் சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு யாக சாலையை அடைந்தது. தொடர்ந்து 2-ம் கால யாக பூஜை நடந்தது.

    அதன்பின்னர் 3-ம் கால யாக பூஜை, யந்திர ஸ்தாபனம், கோபுர கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடை

    பெற்றது. கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபி–ஷேகம், இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.இதையொட்டி காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைதொடர்ந்து காலை 9.20 மணி முதல் 10.20 மணிக்குள் யாத்ரா தான சங்கல்பம் நடக்கிறது. பின்னர் விமானம், கொடிமரம், தந்தி மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா காரணமாக குன்னூர் நகரமே விழாக்கோ லம் பூண்டுள்ளது.

    Next Story
    ×