என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பெண்ணை மிரட்டி தாக்கிய தொழிலாளி கைது
Byமாலை மலர்30 May 2023 9:30 AM GMT
- அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடாச்சாரி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி சரஸ்வதியை தாக்கினார்.
- காயமடைந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சரஸ்வதி (வயது 38). ஓசூர் சென்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சாரி (41). தொழிலாளி. 2 பேர் குடும்பத்திற்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நேற்று மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடாச்சாரி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி சரஸ்வதியை தாக்கினார். இதில் காயமடைந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சரஸ்வதி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடாச்சாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X