என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆனைமலை அருகே கூலித்தொழிலாளி பலி
- குடிபோதையில் இருந்த முருகேசன், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
- ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.
இவரது மகன் முருகேசன்(வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி காளிஸ்வரி என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முருகேசனை அவரது மனைவி காளீஸ்வரி பிரிந்து சென்றார். இதனால் முருகேசன் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
மனைவி பிரிந்து சென்ற பிறகு முருகேசன் ராசு கவுண்டன் தோட்டத்தில் தனது உறவினரான சிவராசு என்பவருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
மனைவி பிரிந்ததால் மது பழக்கத்திற்கு அடிமையான அவர் குடித்து கொண்டு தோட்டத்திற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சம்பவத்தன்று முருகேசன் மது குடித்து விட்டு, தோட்டத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள கிணற்று மேட்டில் அமர்ந்து இருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த முருகேசன், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
இதில் தண்ணீரில் மூழ்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்