search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூர் அருகே  தொழிலாளி கொலை
    X

    பேரூர் அருகே தொழிலாளி கொலை

    • செல்வராஜின் உறவினர்கள் போராட்டம் நடத்தி ரவிராகுல், யுகேஷ் கோகுல் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
    • தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள கரடிமடையை கரும்பர் வீதியை சேர்ந்தவர் ரவிராகுல் (வயது 32). இவரது தம்பி யுகேஷ் ராகுல் (29). இவர் பேரூர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவர்கள் 2 பேரும் காளம்பாளையத்தில் டாஸ்மாக் பார் வைத்து நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தன்று இவர்களது கடைக்கு கரடிமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வராஜ் (55) என்பவர் மது குடிக்க சென்றார். அப்போது செல்வராஜ், பார் உரிமையாளர்கள் ரவிராகுல், யுகேஷ்கோகுல் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து தொழிலாளியை தாக்கினர். இதனையடுத்து அவர் அங்கு இருந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் தாக்குதலால் ஏற்பட்ட காயத்துக்கு அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

    இந்தநிலையில் செல்வராஜ் மீண்டும் சென்று மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு சென்ற போது அங்குள்ள தோட்டத்தில் மயங்கி விழுந்து இறந்தார். இதனை பார்த்த ஒரு அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது செல்வராஜின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அவரை அடித்து கொன்ற ரவிராகுல், யுகேஷ் கோகுல் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பின்னர் செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் செல்வராஜை அடித்து கொலை செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் யுகேஷ்கோகுல், மற்றும் அவரது அண்ணன் ரவி ராகுல் ஆகியோரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×