என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து
- வெள்ளிங்கிரியிடம் பணம் கேட்டு 2 வாலிபர்கள் மிரட்டியுள்ளனர்.
- மேட்டுப்பாளையம் போலீசார் தலைமறைவான சூர்யாவை தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் எஸ்.எம். நகரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (29). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள், வெள்ளிங்கிரியிடம் பணம் கேட்டனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை தாக்கி கீழே தள்ளி கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தொழிலாளியை கத்தியால் குத்தியது மேட்டுப்பாளையம் பழைய முனிசிபல் ஆபீஸ் சாலையைச்சேர்ந்த சூர்யா (21),நீலகிரி மாவட்டம் கோத்தகிரி முல்லை நகரை சேர்ந்த அன்பு என்ற சந்தோஷ் (19) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், அன்பு என்ற சந்தோசை கைது செய்தனர்.
தொடர்ந்து தலைமறைவான சூர்யாவை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்