search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விழுப்புரத்தில் காங்கிரஸ் சார்பில் தீபம் ஏந்தி பேரணி - ஆர்ப்பாட்டம்
    X

    விழுப்புரத்தில் காங்கிரசார் தீபம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தபடம்

    விழுப்புரத்தில் காங்கிரஸ் சார்பில் தீபம் ஏந்தி பேரணி - ஆர்ப்பாட்டம்

    • விழுப்புரம் காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய தீபம் ஏந்திய மாபெரும் பேரணி காந்தி சிலை வரை நடைபெற்றது.
    • மாநில செயலாளர் வழக்கறிஞர் தயானந்தம் தொடக்க உரையாற்றினர்.

    விழுப்புரம்:

    ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தீபம் ஏந்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம் தலைமையில் தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். மாநில செயலாளர் வழக்கறிஞர் தயானந்தம் தொடக்க உரையாற்றினர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடக்கி வைத்தார். விழுப்புரம் காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய தீபம் ஏந்திய மாபெரும் பேரணி காந்தி சிலை வரை நடைபெற்றது. அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில துணை தலைவர் குலாம் மொய்தீன், விழுப்புரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, லதா பீட்டர், நகர மன்ற உறுப்பினர் சுரேஷ் ராம், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜ்குமார், விஜயரங்கன், நாராயணசாமி, ஐஎன்டியுசி மாநில இணை செயலாளர் காஜா மொய்தீன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முபாரக் அலி, சிவாஜி மன்ற தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் நடராஜன், விஸ்வநாதன், எஸ்.சி.எஸ்.டி. மாவட்ட தலைவர் சேகர், எஸ்.சி.எஸ்.டி. மாநில துணை தலைவர் உதயானந்தம், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், வட்டார தலைவர்கள் ராதா, ரவி, காமராஜ், பேரூராட்சி தலைவர் கதிர்வேல், இளைஞர் காங்கிரஸ் விழுப்புரம் தொகுதி தலைவர் பிரபாகரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார் விஜயகுமார், கிருஷ்ணகுமார், சீனிவாசன், ஆனந்த், இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர் மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் விக்கிரவாண்டி துணை தலைவர் மணிகண்டன்,வர்த்தக பிரிவு தலைவர் ரமேஷ்,ஓபிசி பிரிவு தலைவர் செல்வம், நகர எஸ்.சி.எஸ்.டி. தலைவர் பாரிபாபு , எஸ்.சி.எஸ்.டி. மாவட்ட பொருளாளர் புஷ்பராஜ், ராகுல் காந்தி பேரவை மாவட்ட தலைவர் ஞானசேகரன்,நகர நிர்வாகிகள் சீனு,தாமோதிரன், மூர்த்தி, சுந்தர், வசந்தா காசிநாதன், விக்டோபாய், வசந்தா, முருகேசன்,கீதா, ராஜேஸ்வரி, சுரேஷ், துரைசிங், சிவாஜி கிருஷ்ணன், பரிமளா,இளைஞர் காங்கிரஸ் விழுப்புரம் சட்டமன்ற மு.தலைவர் ரமணன், சமூக ஊடகத்துறை மாவட்ட பொதுச் செயலாளர் சாந்தராஜா, இலக்கிய பிரிவு தலைவர் செந்தில்,வட்டார நிர்வாகிகள் திருவெண்ணெய்நல்லூர் ராஜேஷ்,பையூர் முத்து,கொங்கராயனூர் ஆறுமுகம்,ராமகிருஷ்ண, வளவனூர் இளைஞர் காங்கிரஸ் பேரூராட்சி தலைவர் ஆனந்த், மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கவிஷ்குமார் ,மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தினேஷ் , துணை தலைவர் ஷாஜகான், திருவெண்ணெய்நல்லூர் எஸ்.சி.எஸ்.டி. வட்டார தலைவர் குமரேசன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×