என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்
- மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகம் நடைபெற்றது.
- இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில்,தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான பிரீத்தா தலைமை தாங்கினார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சரவணகுமார்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சுபாஷினி,குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சிதி ரம்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் இலவச சட்ட உதவி குறித்தும் அரசு நலத்திட்டங்கள் இலவச சட்ட உதவி மையம் மூலம் எவ்வாறு பெறலாம்,குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும், என்பது குறித்தும்,குழந்தை திருமணம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார்,வார்டு உறுப்பினர்கள் பாரதி ராஜா,ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சேர்ந்த நம்பிராஜன் பால் செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்