search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவாலங்காடு அருகே மளிகை கடையில் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    திருவாலங்காடு அருகே மளிகை கடையில் பூட்டை உடைத்து கொள்ளை

    • வழக்கம் போல் கடையை திறக்க சென்ற போது கடையின் ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருவாலங்காடு அடுத்த மணவூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர் மணவூர் ரெயில் நிலையம் அருகே மளிகைகடை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்ற போது கடையின் ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. கடையில் இருந்த ரூ.5600 ரொக்கம் மற்றும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணை பாக்கெட்டுகள், மளிகை பொருட்களை கொள்ளையர்கள் அள்ளி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×