search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கார் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
    X

    விபத்தில் சிக்கிய கார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

    கார் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்

    • கார் கவிழ்ந்து 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    சிவகங்கை மாவட்டம் நென்மேனியை சேர்ந்த திவாகர் (வயது 26), அரவிந்த் (25), தினேஷ்குமார் (23), திருநாவுக்கரசு (22), சரத்குமார் (22) உள்பட 11 பேர் தூத்துக்குடியில் நடந்த வீரன் அழகுமுத்துகோன் குருபூஜைக்கு காரில் சென்றனர்.

    அங்கு பூஜையில் பங்கேற்ற இவர்கள் இரவு ஊருக்கு புறப்பட்டனர். காரை விக்னேஷ்கண்ணன் என்பவர் ஓட்டினார். இரவு 11 மணியளவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரிகுளம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற வாகனத்தை விக்னேஷ்கண்ணன் முந்த முயன்றார்.

    இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அப்பகுதியினர் காரில் சிக்கி படுகாயம் அடைந்திருந்த 11 பேரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×