search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
    X

    பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

    • பிளஸ்-2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது தொடர்பான புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கூடல் புதூர் பொதிகை நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் குமர வடிவேல். இவரது மகள் ஹரிணி (வயது16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் ஹரிணி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். அவர் சரியாக தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது. அவர் இது தொடர்பாக குடும்பத்தி னரிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் ஹரிணி சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை அண்ணாநகர், கோமதிபுரம், வித்தகர் தெருவை சேர்ந்தவர் பேபி பாலசுப்ரமணி(வயது26). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லா மல் இருந்து வந்தார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர் பான புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×