என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை
- வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை டி.வி.எஸ் நகர் துரைச்சாமி ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவர் அந்தப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். சரியாக வருமானம் இல்லாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சுப்பிர மணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை வண்டியூர், செம்மண் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 53). இவரது மனைவி சுமதி. வேலுச்சாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக அவருக்கு அல்சர் பாதிப்பு ஏற்பட்டது. அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வேலுச்சாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்