என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
விபத்தில் 2 வாலிபர்கள் பலி
- மதுரை அருகே நடந்த விபத்தில் 2வாலிபர்கள் பலியானார்கள்.
- வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மதுரை
மதுரை அருகே உள்ள வலையங்குளம் நெடுமதுரையை சேர்ந்தவர் அழகு (வயது 48). நேற்று காலை இவர் அதே பகுதியை சேர்ந்த மொக்கை என்பவருடன், மோட்டார் சைக்கிளில் திருப்பரங் கு ன்றம் முருகன் கோவிலுக்கு சென்றார். பின்னர் திருமங்கலம் ரிங்ரோடு-நிலையூர் ரோட்டில் திரும்பியபோது திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் காயமடைந்தனர். தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அழகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அழகு மனைவி பெரிய அழகி கொடுத்த புகாரின்பேரில் சேலம் அன்னதானப் பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் ஷேக் தாவூத்தை கைது செய்தனர்.
கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பிரிவில் வந்தபோது நள்ளிரவில் சாலையை கடக்க முயன்ற 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது சம்பந்த மாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்