என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது
- கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு போலீசார் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படு ம்படியாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்த னர். இதில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வகுரணி கணவாய்பட்டியைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் (வயது38), ராம்குமார் (21), காளப்பன்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீராம் (18) ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சா, அவர்கள் வந்த 2 இருசக்கர வாகனங்கள், அவர்கள் வைத்திருந்த 3 செல்போன்கள் மற்றும் ரூ.1475 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்