search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை வந்த ரெயிலில் 35 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது
    X

    கைதான வேல்முருகன், மணிகண்டன் ஆகிேயாருடன் போலீசார் உள்ளனர.

    மதுரை வந்த ரெயிலில் 35 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது

    • மதுரை வந்த ரெயிலில் 35 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியதில் 2 பேரை கைது செய்தனர்.
    • பெங்களூரு- நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயிலில் சோதனை நடத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை ரெயில் நிலையத்துக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, ரெயில்வே போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார், நேற்று இரவு மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சோதனை நடத்தினர்.

    பெங்களூரு- நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயிலில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 35

    கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை ரெயிலில் கடத்திய நெல்லை பாளையங்கோட்டை, நயினார் தெருவை சேர்ந்த வேல்முருகன், மணிகண்டன் (வயது 32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×